×

திருச்சியில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற மர்மநபர்களுக்கு வலை

தில்லைநகர்: திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கர். இவரின் மனைவி ராணி (45). இவர் நேற்றுமுன்தினம் மாலை 4 மணி அளவில் பாரதிநகர் உய்யகொண்டான் வாய்க்கால் கரையோரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ராணியை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். அப்போது சுதாரித்துக் கொண்ட ராணி கூச்சல் போட்டார். இதனால் பயந்துபோன மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து ராணி திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற மர்மநபர்களை தேடி வருகின்றார்

The post திருச்சியில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற மர்மநபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Thillainagar ,Ravi Shankar ,Kallangadu ,Vannarappet, Puttur, Trichy ,Rani ,
× RELATED செல்போன் திருடியவர் சிறையில் அடைப்பு