×

பிஏபி வாய்க்காலில் மிதந்து வந்த மூதாட்டி சடலம் மீட்பு

காங்கயம்,ஏப்.10:காங்கயம் அருகே ஏ.சி.நகர் பகுதியில் செல்லும் பி.ஏ.பி வாய்க்காலில் நேற்று மாலை சுமார் 3.30 மணியளவில் மூதாட்டி ஒருவரது உடல் வாய்க்காலில் மிதந்து வந்தது. இதைப்பார்த்த அப்பகுதியினர் உடனடியாக காங்கயம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காங்கயம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு வைத்தனர். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து போன மூதாட்டி சிவன்மலை அருகே கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள்(78) என்பதும், வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது.

The post பிஏபி வாய்க்காலில் மிதந்து வந்த மூதாட்டி சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : PAP canal ,Kangayam ,Gangayam ,
× RELATED வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு: பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்