×

சூலூர் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை

சூலூர்,ஏப்.10: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் வெள்ளலூர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய பூமியில் விவசாயம் செய்து கொண்டு அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். வீட்டில் சண்முகசுந்தரத்தின் தாயார் சுப்புலட்சுமி மட்டும் தனியாக வசித்து வந்தார். அவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்ததின் காரணமாக எலும்பு முறிவு ஏற்பட்டதால் தனது மகன் சண்முகசுந்தரம் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சண்முக சுந்தரம் பட்டணம் வீட்டிற்கு அருகில் இருக்கும் வீட்டு உரிமையாளர் சண்முகசுந்தரத்துக்கு போன் செய்து உங்களது வீட்டில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக தகவல் அளித்துள்ளார். சண்முகசுந்தரம் உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் இருந்த துணிமணிகள் அனைத்தும் பரவலாக கிடந்துள்ளது. பீரோவின் உள்பக்க லாக்கரை உடைத்து அதிலிருந்து 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக சண்முகசுந்தரம் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைத்து அங்குள்ள தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

The post சூலூர் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Sulur ,Shanmugasundaram ,Pattanam ,Coimbatore district ,Vellalur ,Dinakaran ,
× RELATED சூலூரில் போக்சோ வழக்கில் இருவர் கைது