×

சங்கராபுரம் ஊராட்சியில் அரசு பள்ளி துவங்க வேண்டும் சட்டமன்றத்தில் எம்எல்ஏ மாங்குடி கோரிக்கை

காரைக்குடி: காரைக்குடி ராமநாதன் செட்டியார் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சட்டமன்றத்தில் எம்எல்ஏ மாங்குடி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயுள்ளதோடு காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். தற்போது நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் காரைக்குடி தொகுதிக்கு தேவையானவை குறித்து பேசியுள்ளேன். அண்ணாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பட்ட வழங்கப்பட்ட நிலையில் அது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் மீண்டும் பட்டா வழங்க வேண்டும். செக்காலைகோட்டை, கழனிவாசல் பகுதியில் பத்திரபதிவு நடக்கிறது ஆனால் பட்டாமாறுதல் செய்யப்படவில்லை இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சருகணியில் துணைமின் நிலையம் அமைக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு விவசாய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும்.

6 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும். 16 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும். ராமநாதன் செட்டியார் உயர்நிலைப்பள்ளி உள்பட 7 பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும். புளியால் கிராமத்தில் ஆரம்ப சுகாதாரநிலையம். அமராவதிபுதூர் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க வேண்டும். 13 பள்ளிகளில் பெண்கள் கழிப்பறை வசதி செய்ய வேண்டும். அழகப்பாபுரம், அண்ணாநகர், முத்துராலிங்க தேவர்நகர், மருத்துபாண்டியர் நகர், காளவாய் பொட்டல், தேவர் குடியிருப்பு உள்பட பல்வேறு பகுதிகளில் வீட்டு மனை பட்ட வழங்க வேண்டும். 24 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை வசதி செய்ய வேண்டும். தேவகோட்டையில் பள்ளிகளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு மீண்டும் தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கராபுரம் ஊராட்சியில் அரசு பள்ளி தொடங்க வேண்டும். தேவகோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி பேசியுள்ளதாக தெரிவித்தார்.

The post சங்கராபுரம் ஊராட்சியில் அரசு பள்ளி துவங்க வேண்டும் சட்டமன்றத்தில் எம்எல்ஏ மாங்குடி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : MLA ,Mangudi ,Assembly ,Shankarapuram panchayat ,Karaikudi ,Ramanathan Chettiar High School ,Dinakaran ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...