×

கயிறு திரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

மொடக்குறிச்சி, ஏப்.9: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட அசோகபுரம் நேரு வீதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (53). இவர், வெண்டிபாளையம் அடுத்த பாலதண்டாயுத வீதியில் கயிறு திரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். நேற்று மாலை கயிறு திரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, மொடக்குச்சி மற்றும் ஈரோடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கயிறு திரிக்கும் நார்கள் மற்றும் மிஷின்கள், சிசிடிவி கேமரா உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தது. மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த தீ விபத்தில் நார்கள் மற்றும் மெஷின்கள் சேதம் அடைந்தது. மேலும், இந்த தீ விபத்துக்கு குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கயிறு திரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Modakurichi ,Chinnaswamy ,Ashokapuram Nehru Road ,Erode Corporation ,Palathandayutha Road ,Vendipalayam ,Dinakaran ,
× RELATED காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு