×

25ந்தேதி ரயில் மறியல் போராட்டம்

கடலூர், ஏப். 9: கடலூரில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. நிர்வாகி வழக்கறிஞர் கலையரசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் கடலூரில் நிருபர்களுக்கு கூறியதாவது: பாஜக அரசு அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி வருகின்றது. பிரதமர் மோடி மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் ராகுல் காந்தியை சீண்டி வருகிறார். பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி தவறுதலாக பேசியதாக கூறி இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கி உள்ளது வரலாற்றில் இல்லாதது ஒன்றாகும். ராகுல் காந்தி அதானி மக்கள் பணத்தில் ஊழல் செய்ததாக கூறியதை பிரதமர் மோடியால் ஏற்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சி மக்களை முறையாக அணுகி அதன் மூலம் ஆட்சியைப் பிடிக்க எண்ணுகிறார்கள்.

ஆனால் பா.ஜ.க அரசு ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை மக்கள் மத்தியில் திணித்து வருவதோடு, மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் பல்வேறு அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ராகுல் காந்திக்காக இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டம் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் வருகிற 15ந்தேதி தீப்பந்தம் ஏந்தியும், 20ந்தேதி சாலை மறியல் போராட்டம், 25ந்தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு பாஜக அரசுக்கு எதிர்ப்பாக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். அப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் ராமராஜ், கடல் கார்த்திகேயன், அன்பழகன், கலைச்செல்வன், வசந்த ராணி, ஏழுமலை, ஆறுமுகம் உட்பட பலர் உடன் இருந்தனர்.

The post 25ந்தேதி ரயில் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : 25th ,Cuddalore ,District Youth Congress ,Kalaiyarasan ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை