![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32475244/thumb.jpg)
சென்னை: பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதேபோல் தியாகநகரில் மே 17 இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பாரத பிரதமர் மோடி இன்று பிற்பகல் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலைய முனையத்தை திறந்து வைக்கவுள்ளார்.
பின்னர், சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயிலை புதிதாக இயக்குவது திட்டத்தையும், இது போன்று பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி சென்னை வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து Go Back Modi என்ற கோஷங்களை எழுப்பியபடி 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
அதை தொடர்ந்து டி.நகரில் பெரியார் சிலைக்கு முன்பாக மே 17 இயக்கத்தை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையிலும் 40-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சி ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வாறு சென்னையில் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடி வருகைக்கு கருப்பு கோடி ஏந்தியும், கருப்பு சட்டை அணிந்தும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
The post மோடியே திரும்ப போ… பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு காங்கிரஸ் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்..!! appeared first on Dinakaran.