×

வீட்டில் தீ விபத்து; 4 குழந்தைகள் தீயில் கருகி பலி: உத்தரகாண்டில் சோகம்

விகாஸ்நகர்: உத்தரகாண்ட் அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் தீயில் கருகி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் துனி பகுதியில் 4 மாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் ராம் ஜோஷி குடும்பத்தினர் வசித்து வந்தானர். இந்நிலையில் அவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால், வீட்டிற்குள் இருந்த 4 குழந்தைகள் உட்பட 8 பேரும் வீட்டில் இருந்து வெளியே தப்பி வரமுடியவில்லை.

தகவலறிந்த தீயணைப்பு மீட்பு குழுவினர், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். இருந்தாலும் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 8 பேரையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் 4 குழந்தைகளும் தீயில் கருகி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். படுகாயமடைந்த 4 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் எஸ்.எஸ்.பி திலீப் சிங் குன்வர் கூறுகையில், ‘ஓய்வுபெற்ற கல்வித் துறை அதிகாரியான ராம் ஜோஷியின் வீட்டில் இரவு நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டது. வீட்டிற்குள் இருந்து எவரும் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டதால் 4 குழந்தைகள் பலியாகினர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

The post வீட்டில் தீ விபத்து; 4 குழந்தைகள் தீயில் கருகி பலி: உத்தரகாண்டில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Utterkhand Vikasnagar ,Utgarkhand ,Uttarakhand ,Dinakaran ,
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ