×

கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

தேனி, ஏப். 7: தேனி அருகே வளையபட்டி கிராமத்தை சேர்ந்த மாயன் மகன் கண்ணன் (35) உள்ளிட்ட சிலர் அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றனர். அப்போது கண்ணன் கிணற்றிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த சக இளைஞர்கள் தீயணைப்பு மீட்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தேனி தீயணைப்பு துறை வீரர்கள் கிணற்றில் மூழ்கிய கண்ணனை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி சடலத்தை மீட்டனர்.

அதனை தொடர்ந்து பழனிசெட்டிபட்டி போலீசார் இறந்து போன கண்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். இறந்து போன கண்ணனுக்கு மனைவியும் , 2 குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Theni ,Mayan ,Kannan ,Brangapatti ,
× RELATED டிடிவி மீது கிரிமினல் வழக்கு; தேனி கோர்ட்டில் மனு