×

இன்று புனித வெள்ளி சிலுவை பாதை வேப்பந்தட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒரு கோடி கையெழுத்து இயக்கம்

பெரம்பலூர், ஏப்.7: வேப்பந்தட்டையில் இந்திய ஜனநாய க வாலிபர் சங்கத்தின் சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் சார்பில், போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கம், பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரு கிறது. அதன் ஒரு பகுதியாக, வேப்பந்தட்டைஒன்றியம் வேப்பந்தட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தினை குவைத் தமிழர் நல சங்கத்தின் நிறுவனர் அகமது கபீர் கையெழுத்திட்டு துவங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சரவணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சலாவுதீன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ், இந்திய மாண வர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் முருகே சன்,விவசாய தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலை வர் பாரதி, விவசாய தொழி லாளர் சங்கத்தின் பொரு ளாளர் செல்வராஜ், விவசா ய சங்க நிர்வாகி கோவிந்தன், இந்திய ஜனநாயக வா லிபர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் வேல்முருகன் சடையப்பன் பிரியா பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post இன்று புனித வெள்ளி சிலுவை பாதை வேப்பந்தட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Indian Democratic Youth Association ,Holy Friday Station of the Cross ,Veppanthatta ,Perambalur ,Bharatiya Jananayak Youth Association ,Good Friday ,Dinakaran ,
× RELATED கொடுத்த பணத்தை திருப்பி தராதவரின் பைக்கினை எரித்த மூவருக்கு வலை