×

குழந்தைகளுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

ஈரோடு, ஏப். 7: ஈரோடு பழையபாளையம் அம்பிகை நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (32). இவருக்கு சுகன்யா (27) என்ற மனைவியும், 7 வயது மற்றும் 4 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சுகன்யா அவரது சூரம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் மூத்த மகனுக்கு பள்ளி கட்டணம் செலுத்தி வருவதாக மகன்களுடன் கடந்த 3ம் தேதி மாலை சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து வினோத்குமார் சம்மந்தப்பட்ட பள்ளி மற்றும் அக்கம்பக்கம், தோழிகள், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் சுகன்யா கிடைக்கவில்லை. இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீசில் வினோத்குமார் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சுகன்யா மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.

The post குழந்தைகளுடன் மனைவி மாயம்: கணவர் புகார் appeared first on Dinakaran.

Tags : Erode ,Vinod Kumar ,Ambikai Nagar, Old Palayam, Erode ,Sukanya ,
× RELATED தனியார் ஆசிரமத்தில் தங்கியிருந்த மூதாட்டி சாவு