×

கேரளாவில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை; கன்னியாகுமரி, குளச்சலில் தாக்குதல் நடத்த திட்டமா?.. கைதான ஷாரூக் செய்பி பரபரப்பு வாக்குமூலம்

திருவனந்தபுரம்: கோழிக்கோடு ரயிலில் தாக்குதல் நடத்திய ஷாருக் செய்பியை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர். கன்னியாகுமரி, குளச்சலில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டதா? என்றும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆலப்புழா-கண்ணூர் எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 2ம் தேதி இரவு ஒரு மர்ம ஆசாமி பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிருக்கு பயந்து, ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்த கண்ணூரை சேர்ந்த 2 வயது குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். அந்த இடத்தில் கிடத்த செல்போனை வைத்து நடத்திய பரிசோதனையில் தாக்குதல் நடத்தியது டெல்லி சகீன்பாக் பகுதியைச் சேர்ந்த ஷாருக் செய்பி(24) என்பது தெரியவந்தது.

இதற்கிடையே மத்திய உளவுத்துறை ஷாருக் செய்பியின் செல்போனை வைத்து நடத்திய விசாரணையில் அவன் மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் இருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் நேற்று கேரள போலீசார் கோழிக்கோடு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து மும்பை வரை ரயிலில் வந்த இவர், பின்னர் அங்கிருந்து வேறு ஒரு ரயிலில் கேரளா வந்துள்ளார். அப்போது அவருடன் வேறு ஒருவரும் பயணம் செய்து உள்ளார். அவர் கேரளாவில் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியதாகவும், அது எந்த ஸ்டேஷன் என்று தனக்குத் தெரியாது என்றும் ஷாருக் செய்பி கூறினார். அதன் பிறகு ஒரு பங்கிலிருந்து 2 பாட்டிலில் பெட்ரோல் வாங்கி கண்ணூர் ரயிலில் ஏறி உள்ளார்.

இதன் பிறகு தான் அந்த ரயிலில் பயணிகள் மீது அவர் தாக்குதல் நடத்தினார். இப்படி செய்தால், வாழ்க்கையில் நல்லது நடக்கும் என்று ஒருவர் கூறியதால் தான் இது போன்ற செயலில் ஈடுபட்டதாக ஷாருக் செய்பி போலீசிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார். இந்த தாக்குதலின் பின்னணியில் நிச்சயமாக வேறு சிலர் இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். ஷாருக் செய்பியின் பேக்கில் இருந்த கைப்புத்தகத்தில், திருவனந்தபுரம், கழக்கூட்டம், கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது. இதனால் இந்த பகுதிகளிலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கலாமா? என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்தது. இது தொடர்பாகவும் அவரிடம் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடந்தது.

தீவிரவாத தொடர்பா?
இது குறித்து கேரள டிஜிபி அனில்காந்த் கூறியது: ஷாருக் செய்பியிடம் முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவருக்கு தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா என இப்போது கூற முடியாது. இந்த சம்பவத்தில் வெறு யாருக்கும் ெதாடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.

ஆஸ்பத்திரியில் அனுமதி
ஷாருக் செய்பியை விசாரணைக்கு பிறகு மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு ெகாண்டு ெசன்றனர். பரிசோதனையில் அவருக்கு மஞ்சள்காமாலை இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்த பி்ன்னரே அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

The post கேரளாவில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை; கன்னியாகுமரி, குளச்சலில் தாக்குதல் நடத்த திட்டமா?.. கைதான ஷாரூக் செய்பி பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Kanyakumari, Kulachal ,Shah Rukh Seibi ,Thiruvananthapuram ,Kozhikode ,Shahrukh Seibi ,Kanyakumari ,Kulachal ,Kulachal, Kanyakumari ,Dinakaran ,
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்