×

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பில்லங்குளம் முருகன் கோயிலில் தேரோட்டம்

பெரம்பலூர், ஏப். 6: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பில்லங்குளம் முருகன் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பில்லங்குளம் கிராமத்தில் மாரியம்மன் மற்றும் முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 8 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காப்பு கட் டுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

நேற்று முன் தினம் வள்ளி-தெய்வானை சுப்பிரமணியர், கல்யாண நிகழ்ச்சியும், சக்திஅழைத்தல், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெ ற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட இத்தேர் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, பின்னர் கோயிலை வந்தடைந்தது.
இவ்விழாவில் பில்லங்குளம் மற்றும் அருகில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

The post பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பில்லங்குளம் முருகன் கோயிலில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Chariot ,Billangulam Murugan Temple ,Panguni Uthra ,Perambalur ,Perambalur district ,Veppanthatta taluka ,
× RELATED முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா