×

பத்திரபதிவு செய்ய மறுத்த வழக்கில் மனுதாரருக்கு சார்பதிவாளர் ரூ.60,000 நஷ்டஈடு வழங்க வேண்டும்: பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

பெரம்பலூர், மார்ச் 18: பெரம்பலூரில் டிரேடிங் நிறுவன உரிமையாளரின் சொத்து ஆவணத்தை பத்திரப்பதிவு செய்ய மறுத்த வேப்பூர் சார் பதிவாளர் ரூ.60 ஆயிரம் நஷ்டஈடு வழங்க பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன் மகன் பச்சமுத் து(40). பெரம்பலூர் 4ரோடு அருகே பச்சமுத்து, மக்காச் சோளம், பருத்தி கொள்மு தல்செய்து விற்பனை செய் யும் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு அந்தூர் கிரா மத்தைசேர்ந்த ரகுபதி என்பவருக்குச் சொந்தமான வீட்டுமனையை கிரயம் செ ய்யும் வகையில் ரூ1லட்சம் முன்பணத்தை ரகுபதியி டம் பச்சமுத்து கொடுத்திருந்தார்.

பின்பு அந்த வீட்டு மனையை வேப்பூர் சார்பதி வாளர் அலுவலகத்தில் பதி வு செய்யும் பொருட்டு, உரி ய பதிவுக் கட்டணத்திற்கு உரிய வரைவோலை, பதிவு செய்வதற்கான தட்டச்சு
செய்யப்பட்ட கிரையபத்திர ஆ வணம் ஆகியவற்றை வேப்பூர் சார்பதிவாளர் அலுவ லகத்தில் தாக்கல் செய்தார். ஆனால் ரகுபதி பெயரிலான சொத்தை அவரது சகோதரி அமுதா என்பவரது பெயரில் அடமானம் எழுதி வைத்துள்ளதாகக்கூறி சார்பதி வாளர் அந்த அடமானத்தை பைசல் செய்துவிட்டு பின்பு கிரய பத்திரப் திவிற்கு வருமாறு கூறினார். இதனிடையே சொத்தின் மீதான அடமானத்தொகை யை, தான் பைசல் செய்து விடுவதாககூறி, பச்சமுத்து அதற்கான உறுதிமொழி ஆவணத்தையும் சார்பதி வாளரிடம் தாக்கல் செய்திருந்தார்.

இதனை ஏற்க மறு த்த சார்பதிவாளர் இரவு 9 மணியை கடந்தும், கிரய பத்தி ரத்தை பதிவு செய்ய மறுத்துவிட்டார். இதனால் பதிவு செய்வதற் காக வாங்கியப் பத்திரமும் வீணாகியது. இதனிடையே ரகுபதி இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பச்சமுத்து பதிவு செ ய்வதற்கான உரிய ஆவண ங்கள் சரியாக இருந்தும், அதனை பதிவு செய்யாமல் தவிர்த்துவிட்ட வேப்பூர் சார் பதிவாளர் மற்றும் பெரம்ப லூர் மாவட்ட பதிவாளரிடம் உரிய நஷ்டஈடு கேட்டு, பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நேற்று நீதிமன்ற உறுப்பின ர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை யில் இந்த வழக்கினை விசாரித்த பெரம்பலூர் மா வட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ஜவகர், மனுதாரருக்கு சேவைக் குறைபாடு செய்ததற்கும், அவருக்கு மனஉளைச்சலுக்கும் நிவா ரணமாக ரூ.50ஆயிரம் மற்றும் மற்றும் வழக்கு செலவு த்தொகையாக ரூ10ஆயிர மும் வேப்பூர் சார்பதிவாளர் வழங்கவேண்டும் என உத் தரவிட்டார்.

Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...