×

பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

இடைப்பாடி, மார்ச் 13:மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்கு மட்டும் 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தண்ணீர் குறைந்ததால் செக்கனூர், பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை ஆகிய நீர்மின் கதவணைகள் வழியாக குறைந்தளவு தண்ணீரே செல்கிறது. தற்போது, நீர்மின் கதவணையில் மின்சார உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது.

பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை இடையான விசைப்படகு போக்குவரத்து நடந்து வரும் நிலையில், விடுமுறை தினமான நேற்று பல்வேறு பகுதியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் விசைப்படகியில் உற்சாக சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும், சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் உள்ள மீன் கடைகளில் வியாபாரம் களைகட்டியது. 

Tags : Poolampatti ,
× RELATED காளியம்மன், மாரியம்மன் கோயில் தீ மிதி விழா