×

சுவாமிமலையில் மாசி மாத பௌர்ணமி கிரிவலம்

கும்பகோணம், மார்ச் 10: கும்பகோணம் அருகே சுவாமிமலையில் மாசி மாத பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது. கும்பகோணம் அருகே சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத சுவாமி வழிபாட்டு குழு டிரஸ்ட் சார்பில் மாசி மாத பௌர்ணமி கிரிவலம் வல்லப கணபதி சன்னதியில் இருந்து துவங்கியது. இதில் மாணிக்கவேலர் தலைமை வகித்தார். இந்த கிரிவலத்தில் சிவத்திரு. திருவருட்செம்மல் இறைநெறி இமயவன் வழிகாட்டுதலுடன், கூட்டு வழிபாடு மற்றும் கிரிவலமும் நடைபெற்றது.

இதில் சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் நிர்வாகி கேசவராஜன், மேனேஜிங் டிரஸ்டி சிவசங்கரன், செயலாளர் சேகர், பொருளாளர் சுவாமிநாதன், ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், டிரஸ்டிஸ்கள் மாணிக்கம், சண்முகம், நெடுஞ்செழியன், கமிட்டி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கோவி.கல்யாணகுமார், ஜெமினி, வரதராஜன், ஆசிரியர்கள் ஜெயராமன், கணேசன், சிவக்குமார், சுவாமிநாதன், ராஜா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகர் மாணிக்கவேலர் குடும்பத்தினர் அமுது வழங்கினர்.

Tags : Krivalam ,Swamimalai ,
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்