×

தியாகதுருகம் அருகே பெண்ணிடம் 6 பவுன் தாலிச்செயின் பறிப்பு

தியாகதுருகம்: தியாகதுருகம் அடுத்த லட்சியம் கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி வெண்ணிலா (36). இவர் கடந்த 26ம் தேதி சித்தலூர் பகுதியில் நடைபெற்ற தேர் திருவிழாவுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு செல்லும்போது பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், வெண்ணிலாவை பின்தொடர்ந்தனர். மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வெண்ணிலா கழுத்தில் அணிந்திருந்த 6¼ சவரன் தாலிச்செயின் கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். இதுகுறித்து வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தியாகதுருகம் மற்றும் வரஞ்சரம் பகுதியில் தொடர் குற்றச் சம்பவங்கள் பட்டப்பகலில் நடைபெற்று வருவதாகவும், இரவு நேரங்களில் வீடுகளில் புகுந்து நகை மற்றும் பணம் கொள்ளை சம்பவம் அதிகம் நடைபெறுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, இதுபோன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiagadurugam ,
× RELATED பொதுமக்கள் சாலை மறியல்