×

மாசி மாத பவுர்ணமி கிரிவலம் வரும் 6ம் தேதி உகந்த நேரம் திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, மார்ச் 4: திருவண்ணாமலையில் மாசி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு வரும் 6ம் தேதி உகந்த நாள் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி, மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 6ம் தேதி காலை 5.8 மணிக்கு தொடங்கி 7ம் தேதி காலை 6.45 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, 6ம் தேதி இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், பவுர்ணமியை முன்னிட்டு கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 6ம் தேதி, 7ம் தேதி அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதோடு, பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய வசதியாக அதிகாலை தொடங்கி இரவு வரை நடை அடைப்பு இல்லாமல் தொடர்ந்து தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 6ம் தேதி மாசி மகத்தை முன்னிட்டு பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதமி நதியில் சுவாமி தீர்த்தவாரி நடைபெற உள்ளது. அதையொட்டி, அதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

Tags : Tiruvannamalai ,Masi ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின்...