×

டாஸ்மாக் கடை விற்பனையாளர் மீது தாக்குதல்

திருப்பூர்,பிப்.27: திருப்பூர் ராதாநகர் பகுதியில் டாஸ்மாக் கடையில் தேவ கோட்டையை சேர்ந்த பாண்டி (43) என்பவர் விற்பனையாளராக உள்ளார். கடந்த வாரம் டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில் வாங்க வந்தவருக்கும் பாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை டாஸ்மாக் கடைக்கு வந்த கும்பல், ஏற்கனவே நடந்த சம்பவத்தை கூறி தகராறில் ஈடுபட்டது. பின்னர் பாண்டிய கட்டையால் தாக்கினர். இதில் அவரது தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது. அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

பாண்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து பணத்தை அந்த கும்பல் பறித்து சென்றதாக தகவல் பரவியது. உடனடியாக கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சென்று கடையில் ஆய்வு செய்தனர். பின்னர் தகராறின் போது பணம் எதுவும் பறிக்கப்படவில்லை என்று போலீசார் கூறினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வடக்கு போலீசார், சம்பந்தப்பட்ட கும்பலை தேடி வருகிறார்கள்.

Tags : Tasmac ,
× RELATED டாஸ்மாக் கடைகளில் 44% பீர் விற்பனை உயர்வு