சிவகங்கை, பிப்.25: சிவகங்கை மாவட்ட மோப்ப நாய் படை பிரிவில் புதிய நாய் சேர்க்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட மோப்ப நாய் படைப்பிரிவில் ஜூலி என்ற மோப்ப நாய் இருந்தது. இது பணியில் இருந்து ஒய்வு பெற்றதால், அதற்கு பதிலாக மாவட்ட எஸ்பி செல்வராஜ் உத்தரவின் பேரில் புதிய நாய்க்குட்டி சேர்க்கப்பட்டுள்ளது. டயானா என பெயரிடப்பட்டுள்ள இந்த நாய்க்குட்டிக்கு வெடிகுண்டு கண்டறியும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
6 மாத காலம் சிவகங்கை மோப்ப நாய் படைபிரிவில் அடிப்படை பயிற்சியும், அதன் பின்னர் சென்னை பரங்கிமலையில் கூடுதல் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இதற்கான பயிற்சியாளராக சிறப்பு எஸ்ஐ சிவக்குமார் மற்றும் தலைமைக்காவலர் ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.