×

கார்பெண்டர் தூக்கிட்டு தற்கொலை

ஆவடி: மன உளைச்சலில் இருந்த கார்பெண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடி அடுத்து பட்டாபிராம் நெமிலிச்சேரி தேவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மாம்பாள் (70). இவரது மகன் கீர்த்திவாசன் (45). கார்பெண்டர். இவர், திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து கடந்த 10 வருடங்களாக அம்மாவுடன் வசித்து வந்தார்.  இதனால் மிக மன உளைச்சலிலும் இருந்தவர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு மது அருந்திவிட்டு படுக்க அறைக்கு சென்றவர் மறுநாள் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.தகவலறிந்த பட்டாபிராம் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கீர்த்திவாசன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் சடலத்தை மீட்டு  கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Carpenter ,
× RELATED விபத்தில் கார்பெண்டர் பலி இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி