×

புழல் திருமூலநாதர் கோயிலில் உத்தராயன பிரமோற்சவ பெருவிழா துவக்கம்

புழல், பிப். 24: புழல், காந்தி பிரதான சாலையில்  புகழ்பெற்ற திருமூலநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உத்தராயன பிரமோற்சவ பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சென்னை புழல், காந்தி பிரதான சாலையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சிறப்புமிக்க சொர்ணாம்பிகை ஸ்ரீ திருமூலநாதர்சாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் உத்தராயன பிரமோற்சவ பெருவிழா நடப்பது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டு உத்தராயன பிரமோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் உபயதாரர்கள் முன்னிலையில், திருமூலநாதர் சாமிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் வரும் 6ம் தேதிவரை நடக்கிறது. இதற்கிடையே வரும் 5ம் தேதி மாலை திருமூலநாதர்சாமி கோயில் எதிரே உள்ள குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. பின்னர் 6ம் தேதி பஞ்சமூர்த்தி திருமாடவீதி ஊர்வலம், மாலையில் ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்கின்றன. இதில் சென்னை புறநகர் பகுதிகள், சோழவரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் குமரன் செய்து வருகிறார்

Tags : Utharayana Pramorusava Festival ,Pangal Thirumulanadar Temple ,
× RELATED சாலையில் நடந்து சென்ற வாலிபரை வெட்டி செல்போன் பறிப்பு