×

வெறிநோய் தடுப்பூசி முகாம்

புழல், பிப்.24: கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், செல்லப் பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பு ஊசி மற்றும் விழிப்புணர்வு முகாம் புழல் அடுத்த கதிர்வேடு அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. அம்பத்தூர் கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் கோபு தலைமை வகித்தார். மாநகராட்சி 31வது வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு, உதவி இயக்குனர் பரணி லட்சுமி, புழல் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு செல்ல பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தனர். சிறப்பு முகாமில் புழல், கதிர்வேடு, பத்மாவதி நகர், மகாலட்சுமி நகர், கலெக்டர் நகர், கட்டிட தொழிலாளர்கள் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கால்நடை உதவி மருத்துவர்கள் சர்மிளா, முருகன், மாலா, விஜயலட்சுமி, கால்நடைத்துறை ஆய்வாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags : Rabies ,
× RELATED கோவில்பட்டியில் வெறி நோய் தடுப்பூசி முகாம்