×

ஓசூர் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது

ஓசூர்: ஓசூரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியவரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மசாஜ் சென்டர், ஸ்பா என்ற பெயர்களில் பல இடங்களில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடந்து வருவதாக, மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாக்கூருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள மசாஜ் சென்டர், ஸ்பா சென்டர்களை சோதனை நடத்த அவர் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஓசூர் வைஷ்ணவி நகரில் உள்ள ஒரு பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா சென்டரில், ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில் அங்கு ஸ்பா சென்டர் என்ற பெயரில், இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதன் உரிமையாளரான ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் மாடல் காலனியை சேர்ந்த பிரகாஷ் (46). என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் ஓசூரில் சீதாராம் நகரில் குடியிருந்து வந்தார். இதே போல், ஓசூர் அட்கோ போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையிலான போலீசார், மாருதி நகர் பகுதியில் உள்ள ஒரு ஸ்பா சென்டரில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கும் இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த ஸ்பா சென்டரை நடத்தியதாக குப்பத்தை சேர்ந்த பிரகாசை போலீசார் கைது செய்தனர். மேலும் கர்நாடக மாநிலம் பெங்களூரு நாகசெட்டிஹள்ளி ராமகிருஷ்ணப்பா லேஅவுட்டைச் சேர்ந்த தீபிகா (32) என்ற அழகுகலை நிபுணர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Hosur ,
× RELATED வெயிலுக்கு தானாக எரிந்த பைக்குகள்