×

கயத்தாறில் மாட்டிறைச்சி வியாபாரியை வெட்டிய 3 பேர் கைது

கயத்தாறு, பிப். 21: கயத்தாறில் மாட்டிறைச்சி வியாபாரியை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கயத்தாறு அருகேயுள்ள தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (45). இவருக்கு விஜி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ரஞ்சித்குமார், வீட்டின் முன்பு மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இறைச்சி விற்பனையை முடித்துவிட்டு மதியம் கடையில் உள்ள கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 பேர் கடைக்குள் புகுந்து ரஞ்சித்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். தலை மற்றும் கையில் பலத்த வெட்டு காயமடைந்த ரஞ்சித்குமாரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி ரஞ்சித்குமாரை வெட்டிய தெற்கு சுப்பிரமணியபுரம் சுப்பிரமணியன் மகன் கணேசன் (32), தூத்துக்குடி ராஜபாண்டி நகர் 7வது தெரு சுப்பிரமணியன் மகன் இசக்கி(37), ராமச்சந்திரன் மகன் முருகன் (29) ஆகியோரை கைது செய்தனர்.

 இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரஞ்சித்குமாரின் உறவுக்கார பெண்ணை கணேசன் அவதூறாக பேசியுள்ளார். இதனை ரஞ்சித்குமார் தட்டிக்கேட்டு கணேசனை கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதத்தில் ரஞ்சித்குமாரை வெட்டியது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Gayathar ,
× RELATED கயத்தாறில் துணை ராணுவத்தினர் போலீசார் கொடி அணிவகுப்பு