×

காஞ்சரம்பேட்டை அருகே கன்னிமார் கோயிலில் அமாவாசை வழிபாடு

அழகர்கோவில், பிப். 21: மதுரை காஞ்சரம்பேட்டை அருகேயுள்ள பாறைபட்டியில் உள்ளது பேசும் கன்னிமார் கோயில். இங்கு நேற்று மாசி மாத சர்வ அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக 7 கன்னிமார் அம்மன்களுக்கு மல்லி, ரோஜா, அரளி, முல்லை, மஞ்சள் செவ்வந்தி, நாணல் புல் உள்ளிட்ட வண்ண பூ மாலைகள், பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து உலக நன்மை வேண்டியும், மக்கள் நலமுடன் வாழவும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், குலதெய்வ வழிபாடு உள்ளவர்கள், வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அங்குள்ள மண்டப வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் சித்தி விநாயகர், மந்தை கருப்புசாமி கோயிலிலும் பூஜைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பாறைபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Kannimar Temple ,Kancharampet ,
× RELATED குளத்தூர் அருகே கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம்