×

ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை தோகைமலை அருகே செவலூரில் குளம் தூர்வாரும் பணி துவக்கம்

தோகைமலை, செப்.10: கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள ஆதனூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செவலூரில் உள்ள சீரங்கக்கவுண்டர் குளம் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதனூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்து உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆதனூர் ஊராட்சியில் குடிநீர் ஆதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பணிகளை செய்து வருகின்றனர். இதில் அண்ணா மறுமலர்ச்சி திட்டன் கீழ் செவலூரில் உள்ள சீரங்கக்கவுண்டர் குளம் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பூமா ராஜேந்திரன் தலைமை வகித்து சிறப்பு பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஒப்பந்ததாரர் வடிவேல் உள்பட ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : panchayat council ,Sewalur ,Thokaimalai ,
× RELATED ஒப்பந்ததாரரிடம் ₹15,000 லஞ்சம் ஊராட்சி மன்ற தலைவர் கைது: பாஜவை சேர்ந்தவர்