×

மத்திகிரி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள்

ஓசூர், ஆக.27: ஓசூர் அருகே உள்ள மத்திகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக பிரகாஷ் எம்எல்ஏ, மேயர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினர். அப்போது பிரகாஷ் எம்எல்ஏ பேசுகையில், ‘இப்பள்ளியில் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, புதியதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தரவேண்டும். மாணவர்கள் உட்கார பெஞ்ச், டெஸ்க் வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து கோரிக்கைகளும் செய்து தரப்படும். மாணவர்களின் கல்விக்கு தேவையான அனைத்தையும், அரசு இலவசமாக வழங்கி வருகிறது. மாணவர்கள் இதை சரியான வகையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,’ என்றார்.
நிகழ்ச்சியில், துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், இளைஞரணி சீனிவாசன், இலக்கிய அணி அமைப்பாளர் எல்லோரமணி, மாணவர் அணி ராஜா, கோபாலகிருஷ்ணன், ராமு, திம்மராஜ், மனோகரன், சுரேஷ்பாபு, சுமன், சரவணன், நந்தகுமார், செந்தில்குமார், முனிரத்தினா, முனிராஜ், மஞ்சுளா முனிராஜ் மற்றும் தயாளன், சீனிவாசன், அருள்தாஸ், மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Mathigiri Govt ,
× RELATED பேரூராட்சி துணை தலைவியிடம் கார் வாங்கி தருவதாக ₹12 லட்சம் மோசடி