×

துவரங்குறிச்சி, புத்தாநத்தம் பகுதியில் 2 மணி நேரம் கொட்டிதீர்த்த கனமழை

துவரங்குறிச்சி. ஆக.26: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி மற்றும் புத்தாநத்தம் பகுதிகளில் நேற்று மாலை இரண்டு மணி நேரத்திற்கு மேல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி மற்றும் புத்தாநத்தம் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது இதில் சாலைகளில் வெல்லம் போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது இதில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை உருவாகியது. பொதுமக்கள்மகிழ்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்திற்கு வாகன ஓட்டிகள் சற்று சிரமத்திற்கு உள்ளானார்கள். மேலும் இரு தினங்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வந்த நிலையில். இந்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து ஆறுதலாக இருந்தது. துவரங்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாயத்திற்கு ஏற்ற மழையாக அமைந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் புத்தாநத்தம் அதன் சுற்று வட்டாரப் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அங்கு உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் சற்று சிரமத்திற்கு ஆளானார்கள் .மழை பெய்த நேரத்தில் சாலை எது பள்ளம் எது என்று தெரியாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழும் நிலைக்கு ஆளானார்கள் மேலும் இதுபோன்று விபத்துகளை தவிர்க்க உடனடியாக புத்தாநத்தம் பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Duvarankurichi ,Putthanantham ,
× RELATED துவரங்குறிச்சி பகுதியில் காட்டு...