×

கொமதேக அறிக்கை புகையிலை விற்ற 2 பேர் கைது

பெருந்துறை,  ஆக. 3: ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியில் பெருந்துறை போலீசார் நேற்று  முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள பேக்கரியில் அரசால் தடை  செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை வைத்திருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக  அதேபகுதியை சேர்ந்த கார்த்தி (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல்,  கோபி-சத்தி சாலையில் காந்தி நகர் பகுதியில் மளிகை கடையில் புகையிலை  பொருட்கள் விற்பனை செய்ததாக கடை உரிமையாளரான சுப்பரிமணியம் (63) என்பவரை  போலீசார் கைது செய்தனர். இருவரிடம் இருந்து 21 புகையிலை பாக்கெட்டுகளை  பறிமுதல் செய்தனர்.

Tags : Komadeka ,
× RELATED பாஜவுடன் கூட்டணி இல்லையென்று...