×

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் டாம்கோ மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்க அழைப்பு

பெரம்பலூர், ஜூலை 29: பெரம்பலூர் மாவட்ட கிறிஸ்தவ, இஸ்லாமிய சிறுபான்மையின மாணவ, மாணவியர் டாம்கோ மூலம் பல்வேறு கடனுதவிபெற விண்ணப்பிக்கலாம் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் உதவி திட்டங்களான தனி நபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினைக் கலைஞர்களுக்கான கடன், கல்விக்கடன் போன்ற பல்வேறு கடன்களை சிறுபான்மையினர் பெற்று பயன்பெறலாம். தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவிகிதம் வட்டி விகிதத்தில் அதிகபட்சகடனாக ரூ.20 லட்சம் வழங்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1.20 லட் சத்திற்கு மிகாமலும் கிராம ப்புறமாயின் ரூ98ஆயிரத் திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மேலும் ஆண்டி ற்கு ஆண்களுக்கு 8 சதவி கிதம் வட்டி விகிதத்திலும், பெண்களுக்கு 6 சதவிகித வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் வழங்கப்படும். இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவிகிதம், பெண்களுக்கு 4 சதவிகிதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சிம்- கடன் வழங்கப்படுகிறது.

சுய உதவிக்குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1லட்சம் ஆண்டுக்கு 7 சதவிகிதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவிகிதம், பெண்களுக்கு 6 சதவிகித ம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ1.50 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலை யங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொ ழில்நுட்பக் கல்வி பயில்பவ ர்களுக்கு அதிக பட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ20லட்சம் வரையில் 3 சதவிகிதம் வட் டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவிகிதம், மாணவியர்க ளுக்கு 5 சதவிகிதம் வட்டி விகிதத்திலும் ரூ.30லட்சம் வரை கல்விக் கடன் உதவி வழங்கப்படுகிறது. கடன் ம னுக்களுடன் தாங்கள் சார் ந்துள்ள மதத்திற்கான சா ன்று, ஆதார்அட்டை, வருமா னச் சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெரும் தொ ழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங் கள் கடன்பெறுவதாக இரு ந்தால் மட்டும்) மற்றும் கூட் டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட வேண்டும்.

கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான் றிதழ், உண்மைச் சான்றித ழ் (போனபைட் சர்டிபிகேட்), கல்விக் கட்டணங்கள் செ லுத்திய ரசீது, செல்லான் மற்றும் மதிப்பெண் சான்றி தழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்படநகல்களையும் சம ர்ப்பிக்கவேண்டும்.எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ் லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்ஆகிய சிறு பான்மையினர்கள் மேற்கா ணும் திட்டங்களின்கீழ் பய ன்பெற பெரம்பலூர் மாவ ட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல லுவலகம், பெரம்பலூர் கூட்டறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் ஆகிய வற்றில் ஏதேனும் ஒன்றில் கடன் விண்ணப்பங்களைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களு டன் சமர்ப்பிக்குமாறு கலெக்டர் கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

Tags : TOMCO ,
× RELATED சிறுபான்மை நலத்துறை சார்பில் கைவினை கலைஞர்கள் கடனுதவி பெற வாய்ப்பு