×

விஏஓக்கள் கிராமங்களில் தங்கி பணிபுரிய வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள்

ஆர்.எஸ்.மங்கலம், ஜூலை 28: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் பெரும்பாலான வி.ஏ.ஓ.க்கள் தாங்கள் பணிபுரியும் அந்த அந்த வருவாய் கிராம பகுதிகளுக்கு செல்லாமல், ஆர்.எஸ்.மங்கலம் டவுன் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், அறை எடுத்து தங்கி பணியாற்றி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. ஆகையால் கிராமங்களுக்கு சென்று பணிபுரிய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு சில விஏஓக்கள் தவிர சிலர் கிராமங்களில் தங்காமல் இருப்பதால், கிராம பகுதியில் உள்ள பொதுமக்கள் பஸ் பிடித்து விஏஒ கள் தங்கியிருக்கும் ஆர்.எஸ் மங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த நிலையை மாற்றும் விதமாக வி.ஏ.ஓ.க்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கிராம பகுதிகளுக்கு சென்று பணிபுரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு சார்பாக  விஏஒக்களுக்கு அலுவலகம் இல்லாத இடங்களில் புதிய அலுவலகம் கட்டி அவர்களுக்கான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து மக்கள் பணி செய்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : VAOs ,
× RELATED கீழ்வேளூர் வட்டாட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்..!!