×

தூய்மை நகரங்களின் மக்கள் இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் பணி

காரியாபட்டி, ஜூலை 27: காரியாபட்டி பேரூராட்சியில் தூய்மைக்கான நகரங்களின் மக்கள் இயக்கம் சார்பில், நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்தல், பொது இடங்களில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இப்பணியை பேரூராட்சி சேர்மன் செந்தில் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காரியாபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஸ்ரீரவிக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், எனது குப்பை - எனது பொறுப்பு என்பதை கடைபிடிப்போம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதையொட்டி சாலை ஓரங்கள், நீர்நிலைப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சரஸ்வதி, சங்கரேஸ்வரன், தீபா, நாகஜோதி, முத்துக்குமார், எஸ்.பி.எம் டிரஸ்ட் அழகர்சாமி, இன்பம் பவுண்டேசன் விஜயகுமார், பசுமை பாரதம் பொன்ராம், வழக்கறிஞர் செந்தில்குமார், இன்பம் பவுண்டேசன் நிறுவனர் விஜயக்குமார், அன்னை தெரேசா இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Clean Cities People's Movement ,
× RELATED மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல்...