×

வீரகனூர் அருகே வீடுபுகுந்து பெண்ணிடம் தகராறு செய்த லாரி டிரைவர் கைது

கெங்கவல்லி, ஜூன் 8: தலைவாசல் அடுத்த வீரகனூர் லத்துவாடியை சேர்ந்த காசிலிங்கம் மனைவி அமராவதி(35). கடந்த 11ம்தேதி அமராவதி வீட்டில் தனியாக இருந்தபோது அதேபகுதியை சேர்ந்த லாரி டிரைவரான முருகேஷ்(37), வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அமராவதியிடம் தகராறில் ஈடுபட்டதுடன், அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அமராவதி, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அமராவதி வீரகனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ அந்தோணி மைக்கேல் வழக்குபதிவு செய்து, தலைமறைவான முருகேசை தேடிவந்தார். இந்நிலையில் நேற்று லத்துவாடியில் உள்ள தனது வீட்டுக்கு வந்த முருகேசை, போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை அடைத்தனர்.

Tags : Veerakanur ,
× RELATED கூடுதல் விலைக்கு மது விற்றவர் கைது