×

வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி பெண் தற்கொலை

கோவை:  கோவை கோவில்பாளையம் அருகேயுள்ள அத்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் மனைவி கீதா (37). 17 ஆண்டிற்கு முன் இவர்கள் காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சில நாட்களுக்கு முன் கீதா, குன்னூரில் தனது பெற்றோர் வசிக்கும் பகுதியில் நடந்த திருவிழாவிற்கு சென்றார். அப்போது விழா முடியாத நிலையில் மீண்டும் வீட்டிற்கு செல்லலாம் என வேலுச்சாமி அழைத்துள்ளார். ஆனால் விழா முடிந்த பின்னர் ஊருக்கு செல்லலாம் என கீதா கூறியுள்ளார்.  இது தொடர்பாக கணவர், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த கீதா, கணவருடன் புறப்பட்டு சென்றார். வீட்டிற்கு சென்ற இவர், தனது சகோதரருக்கு, ‘‘நான் தற்கொலை செய்ய போகிறேன், என் இரு மகன்களையும் நன்றாக பார்த்து கொள்’’ என வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினார். சிறிது நேரத்தில் இவர் தூக்குபோட்டு இறந்தார். கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Watts ,
× RELATED இஸ்ரோ புத்தாண்டு அன்று பி.எஸ்.எல்.வி....