×

கோம்பையில் ஓட்டல் தொழிலாளி திடீர் சாவு: உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகை

உத்தமபாளையம், மே 12: உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் ஓட்டல் மாஸ்டர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூரை சார்ந்தவர் மகபூப் கான்(31). இவர் தேனி மாவட்டம் கோம்பையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாடியில் இருந்து கீழே விழுந்து விபத்தில் இறந்துவிட்டதாக அவரது உறவினர்களுக்கு ஓட்டல் நிர்வாகத்திலிருந்து தகவல் கூறப்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் நேரில் வந்து உடலை பார்த்தனர்.

அப்போது வெட்டுக்காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உத்தமபாளையம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதையடுத்து கோம்பை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மஹபூப் கான் விபத்தால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரித்து வருகின்றனர். மகபூப் கான் மனைவி கூறுகையில், எனது கணவர் மரணத்தில் சந்தேகம் உள்ளது. மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தில் உள்ள எங்களுக்கு உரிய நீதியும், நிவாரணமும் வேண்டும். அதுவரை உடலை வாங்கப்போவதில்லை என்றார்.

Tags : Gombe ,
× RELATED கோம்பை பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் வேண்டும்