×

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்கு

திருப்புத்தூர், மே 12: திருப்புத்தூர் அருகே நாச்சியாபுரம் கீழையப்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் மாடு முட்டியதில் ஒருவர் பலியானார். 10க்கும் மேற்பட்வர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து சிறாவயல் வி.ஏ.ஓ. கணேஷ் கிருஷ்ண குமார் கொடுத்த புகாரின் பேரில், கீழையப்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன்(65), தேனப்பன்(50), நாச்சியப்பன்(58), குமார்(57), பழனிச்சாமி(58) ஆகிய 5 பேர் மீது அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக கூறி நாச்சியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED ரத்த அழுத்த பரிசோதனை முகாம்