×

அமெரிக்காவில் வசிக்கும் சென்னை பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.1.43 லட்சம் அபேஸ்

ஆலந்தூர்:  மடிப்பாக்கம் சத்சங்கம் தெருவை சேர்ந்தவர் சாம்பமூர்த்தி (61). இவரது மகள் அபர்ணா அமெரிக்காவில் வசித்து வருகிறார். மடிப்பாக்கம் சபரி சாலையில் உள்ள தனியார் வங்கியில் அபர்ணா பெயரில் சேமிப்பு கணக்கு மற்றும் கிரெடிட் கார்டு உள்ளது. நேற்று முன்தினம் அபர்ணாவின் கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கப்பட்டதாக அவருக்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது. உடனடியாக தனது தந்தைக்கு போன்செய்த அபர்ணா, ‘வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, ஓடிபி எண்களை பெற்றனர். சிறிது நேரத்தில் எனது வங்கி கணக்கில் இருந்து ரூ..1 லட்சத்து 43 ஆயிரத்து 996 எடுத்ததாக எஸ்எம்எஸ் வந்தது,’ என தெரிவித்துள்ளார். இதுபற்றி வங்கியில் விசாரித்தபோது, மர்ம நபர்கள் பணத்தை அபேஸ் செய்தது தெரிந்தது. இதுகுறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் சாம்பமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Chennai ,United States ,
× RELATED தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில்...