×

சாத்தூர் பகுதியில் கோழிப் பண்ணையாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

சாத்தூர், ஏப். 25: சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஒப்பந்த கறிக்கோழிப்பண்ணையாளர்கள் கூட்டம் நேற்று சாத்தூர் அருகே உள்ள ஒடைபட்டி கிராமத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வளர்த்து கொடுக்கும் கறிக்கோழிகளுக்கு இப்போது வழங்கி வரும் கூலி ஒரு கிலோவிற்கு ரூ.6.50ல் இருந்து ரூ.15 உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், ஒப்பந்த கறிக்கோழிப்பண்ணை விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வாரியம் அமைத்து தர வேண்டும் என்பதை வழியுறுத்தியும் வருகிற 27ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக பண்ணையாளர்கள் கலெக்டரை சந்தித்து மனுகொடுக்க போவதாகவும் அறிவித்துள்ளனர்.

Tags : Sattur ,
× RELATED அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது