×

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

 

விருதுநகர், ஏப்.26: மதுரையில் இருந்து சிவகாசிக்கு நள்ளிரவில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை சாத்தூர் உப்புப்பட்டியை சேர்ந்த டிரைவர் உத்தண்டன்(35) ஓட்டி சென்றார். நடத்துனர் அழகுபாண்டி பணியில் இருந்தார். ஆமத்தூர் அருகே ஆனைக்குட்டம் ஏ.மீனாட்சிபுரம் பகுதியில் சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த வசந்தகுமார்(19), சாலையை மறித்தபடி பஸ் டிரைவரை அவதூறாக பேசியுள்ளார்.

மேலும் பஸ் மீது கல்லை எடுத்து வீசிவிட்டு தப்பியோட முயன்றார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உத்தண்டன், அழகுபாண்டி மற்றும் பயணிகள் வசந்தகுமாரை பிடித்து ஆமத்தூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், வசந்தகுமாருக்கும் அவரது சகோதரரான டிரைவர் வேலை செய்து வரும் ரஞ்சித்குமாருக்கும் தகராறு ஏற்பட்டதும், இதனால் அண்ணன் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் பஸ் கண்ணாடியை உடைத்ததும் தெரிந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார் வசந்தகுமாரை கைது செய்தனர்.

The post அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Madurai ,Sivakasi ,Uthandan ,Sattur Uppalpatti ,Anaikuttam A.Meenatshipuram ,Amathur ,
× RELATED கோடை கால பயிற்சி முகாம்: கலெக்டர் துவக்கி வைத்தார்