×

புழல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆயில் கொட்டியதால் சறுக்கிய வாகனங்கள்

புழல்: சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை புழல் கதிர்வேடு சந்திக்கும் பகுதியில் நேற்று முன்தினம்  இரவு ஏராளமான வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருந்து. அப்போது, அவ்வழியாக சென்ற ஒரு வாகனத்திலிருந்து ஆயில் சாலையில் கொட்டியது. இதனால், மாதவரத்திலிருந்து புழல் நோக்கி வாகனத்தில் சென்ற 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் வழுக்கி விழுந்து படுகாயமடைந்தனர். அப்பகுதியினர் இதுகுறித்து புழல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில்  போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆயில் கொட்டப்பட்ட இடத்தின் அருகில் இருந்த மண்ணை எடுத்து அதன் மீது கொட்டி சரிசெய்தனர். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர்.    

Tags : National Highway ,Pulhal ,
× RELATED காளையார்கோவில் பகுதியில் காவிரி...