×

4 மாதமாக மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை அதிரடி கைது

திட்டக்குடி, ஏப். 2: திட்டக்குடி அருகே 16 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.  கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தனியார் மெட்ரிக் பள்ளியில் 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், பள்ளியில் மாணவி கவனம் இன்றியும், சோர்வுடனும் காணப்பட்டு வந்துள்ளார். இதனை கவனித்து வந்த பள்ளி ஆசிரியர் மாணவியிடம் விசாரித்துள்ளார். அப்போது, மாணவி அழுது கொண்டே விவசாய கூலி வேலை செய்து வரும் தனது  தந்தை இரவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறினார். மேலும், கடந்த 4 மாதமாக தனது தந்தை தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார். தாயும் கண்டுகொள்ளவில்லை என கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ஆசிரியர் உடனடியாக கடலூர் சிறுவர் உதவி கரம் மையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சிறுவர் உதவிகரம் மைய அலுவலர் பள்ளிக்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினார். தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருவதால் தேர்வு முடிந்தவுடன் இதற்கான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று தேர்வு முடிவடைந்ததால், சிறுவர் உதவிக்கரம் மைய அலுவலர் மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் இதுகுறித்து புகார் அளித்தார். எஸ்பி உத்தரவின் பேரில் சிறுமியின் தந்தை சக்திவேல்(47) மீது ஆவினங்குடி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தனர். மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோ வழக்கில் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Pokோmon ,
× RELATED செய்யாறில் நட்பாக பழகி...