×

சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் பேருந்து நிலைய கடைகள் ஏலம்

சேத்தியாத்தோப்பு, மார்ச் 31:சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில், பேருந்து நிலைய கடைகளுக்கான குத்தகை ஏலம் நடைபெற்றது.சேத்தியாத்தோப்பு பேரூராட்சி தலைவர் தங்ககுலோத்துங்கன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். சேத்தியாத்தோப்பு பேருந்து நிலையத்தில் உள்ள 14 கடைகளுக்கான முன் வைப்புத்தொகையை செலுத்தி, ஏலத்தில் 35 பேர்கள் பங்கேற்றனர்.பெரிய கடைகள் ரூ.10 ஆயிரத்திற்கும் சிறு கடைகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை ஏலம் போனது. இந்தாண்டு ஏலத்தொகையும், வாடகையும் உயர்ந்ததால் பேரூராட்சி அலுவலர்கள் மகிழ்ச்சியடைந்தனர். செயல் அலுவலர் ஜெயராமன் கூறுகையில், கடை ஏலம் எடுத்தவர்கள் விரைவில் ஒரு வருடத்திற்கான வாடகையை செலுத்த வேண்டும். செலுத்த தவறினால் வைப்பு தொகையை இழக்க நேரிடும். கடைகளை உள் வாடகைக்கு விடக்கூடாது, என்றார்.  

Tags : Sethiyathoppu ,
× RELATED சேத்தியாத்தோப்பு அருகே வீடு தீப்பிடித்து நாசம்