இளம்பிள்ளை, மார்ச் 30:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மகுடஞ்சாவடி கிளையில், தமிழக அரசின் பொது நகைக்கடன் தள்ளுபடி பெற்ற 222 பேருக்கு ₹93.43 லட்சம் மதிப்பில் நகைகளை திருப்பித்தரும் நிகழ்ச்சி நடந்தது. மகுடஞ்சாவடி ஒன்றிய அட்மா குழு தலைவர் பச்சமுத்து தலைமை வகித்து, கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நகைகளை திருப்பி வழங்கினார். நிகழ்ச்சியில் அன்பழகன், கண்ணன், சரவணன், புஷ்பநாதன், ஈஸ்வரன், குணசேகரன், ஜெயப்பிரகாஷ், சூரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.