×

தனியார் வேலை வாய்ப்பு முகாம்

தர்மபுரி, மார்ச் 25: தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று அரசு கலைக்கல்லூரியில் நடந்தது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பங்கேற்றனர். சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், ஒசூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து உட்பட 120-க்கும் மேற்பட்ட தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்றன. இம்முகாமில் தேர்வு செய்யப்பட்ட 806 பேருக்கு, பணி நியமன ஆணை வழங்கும் விதமாக 50 பேருக்கு கலெக்டர் திவ்யதர்சினி பணி நியமன ஆணை வழங்கினார். பயிற்சி முடித்தவர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார். இம்முகாமில் கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மண்டல இணை இயக்குநர் லதா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பாபு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா, தர்மபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Placement Camp ,
× RELATED அம்பேத்கர் கலை கல்லூரியில் மெகா வேலை வாய்ப்பு முகாம்