×

ஈச்சம்பாடி அணையில் இருந்து பொதியன்பள்ளம் அணைக்கட்டுக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை

தர்மபுரி, மார்ச் 24: தர்மபுரி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம், தலைவர் யசோதா மதிவாணன் தலைமையில் நேற்று நடந்தது. துணை தலைவர் சரஸ்வதி, செயலாளர் மாரிமுத்துராஜ் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், ‘ஊராட்சி குழுவிற்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். கோடைகாலம் தொடங்கி விட்டதால் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க, போர்வெல் போடுவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கி, வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் வழங்க வேண்டும்,’ என்றனர். இதற்கு பதிலளித்து ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன் பேசுகையில், ‘கவுன்சிலர்களின் கோரிக்கைகளை கலெக்டரின் பார்வைக்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஈச்சம்பாடி அணையிலிருந்து தண்ணீரை மின்மோட்டார் மூலமாக பைப்லைன் அமைத்து, பொதியன்பள்ளம் அணைக்கட்டிற்கு கொண்டு வர வேண்டும். தென்கரைக்கோட்டையில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தரவேண்டும். தர்மபுரி-அரூர் மெயின் ரோட்டிலிருந்து கசியம்பட்டி வழியாக வட்டாரவாரை செல்லும் தார்சாலையை புதுப்பித்து தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது,’ என்றார். கூட்டத்தில் மாது, சரவணன், சத்தியா சேட்டு, மாது சண்முகம் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ichchambadi Dam ,Pothiyanpallam Dam ,
× RELATED ஈச்சம்பாடி அணைக்கட்டின் இரு...