×

ஊர்க்காவல் படையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்

தஞ்சை, மார்ச் 19: ஊர்க்காவல் படையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என்று தஞ்சை சரக டிஐஜி கயல்விழி பாராட்டுக்கள் தெரிவித்தார். தஞ்சையில் மாவட்ட ஊர்க்காவல் படை தினவிழா நேற்று நடந்தது. மாவட்ட எஸ்.பி., ரவளிபிரியா முன்னிலை வகித்தார். ஊர்க்காவல்படை மண்டல தளபதி சுரேஷ் வரவேற்றார். விழாவில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி பரிசு மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கி பேசியதாவது:ஊர்க்காவல்படையினர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக போலீசாருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். தஞ்சை சரகத்தில் ஊர்க்காவல்படையினர் சிறப்பாக பணியாற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

பல வழக்குகளில் போலீசார் திறம்பட கையாள்வதற்கு காரணம் ஊர்க்காவல் படையினர் தான். அவ்வாறு செயல்படும் ஊர்க்காவல் படையினரை ஊக்குவிக்கும் போது அது மற்றவர்களுடைய உள்மனதில் நாமும் இவ்வாறு செயல்பட வேண்டும் என்று எண்ணத்தோன்றும்.காவல்துறையில் முக்கிய பங்காற்றும் ஊர்க்காவல்படையினர், போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் தஞ்சை மாவட்ட ஊர்க்காவல் படை மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருது மற்றும் சுழற்கோப்பை பட்டுக்கோட்டை பிரிவுக்கும், கோயில் பாதுகாப்பு பணியை திறம்பட செய்ததற்காக கும்பகோணம் பிரிவுக்கும், ஒட்டுமொத்த பணிகளுக்கான சிறப்பு சுழற்கோப்பை தஞ்சை பிரிவுக்கும் வழங்கப்பட்டது.

ஓய்வுபெற்ற ஊர்க்காவல் படை அதிகாரிகளுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. காவல்துறைக்கு உதவியாக இருந்து குற்றங்களை கண்டுபிடிப்பதிலும் குற்றவாளிகளை பிடிப்பதிலும் உதவியாக செயல்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.ஊர்க்காவல் படையினரின் குழந்தைகளுக்கு நடைபெற்ற ஓவியம், பேச்சு, கட்டுரை, மாறுவேடம் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஊர்க்காவல் படையினர் பணி செய்யும் போது உதவிகரமாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் தஞ்சை சரக உதவி தளபதி செந்தில்குமார், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், டிஎஸ்பி.,க்கள் தஞ்சை டவுன் கபிலன், வல்லம் பிருந்தா மற்றும் ஊர்க்காவல்படை உதவி ஆய்வாளர் ஆறுமுகம், எழுத்தர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மண்டல துணை தளபதி மங்களேஸ்வரி நன்றி கூறினார்.

Tags : Kayts ,
× RELATED ஊர்காவல் படையினர் ஊதியத்தை அரசு...