×

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவராக மாரி போட்டியின்றி தேர்வு

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 5: பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் 15வார்டுகளுக்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக- 12 வார்டுகளிலும், விசிக-1, காங்கிரஸ்-1, மனிதநேய மக்கள் கட்சி-1 வார்டுகளில் வெற்றி பெற்றது. நேற்று பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில், திமுகவை சேர்ந்த மாரி என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை தலைவராக திமுகவை சேர்ந்த ரவி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர், துணை தலைவர்கள் முன்னாள் அமைச்சர் பழனியப்பனிடம் வாழ்த்து பெற்றனர். பின்னர் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர், எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

Tags : Marie ,Papirettipatti ,
× RELATED பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழு...