×

குறிஞ்சிப்பாடியில் ₹18 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி துவக்கம்

குறிஞ்சிப்பாடி, பிப். 25: கடலூர் பச்சையாங்குப்பம் முதல் சின்னசேலம் கூட்ரோடு வரையிலான கடலூர்- விருத்தாசலம்-சேலம்( சின்னசேலம் கூட்ரோடு) தேசிய நெடுஞ்சாலை, போக்குவரத்தை அடிப்படையாக கொண்டு பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், குள்ளஞ்சாவடி பகுதியிலுள்ள சந்திப்பில் ரூ.3 கோடியில் சென்டர் மீடியன், இரு புறங்களிலும் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, குறிஞ்சிப்பாடி ரயில்வே பஸ் நிறுத்தம் அருகே உள்ள சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்க ரூ.18 கோடியில் சர்வீஸ் சாலையுடன், மேம்பாலம் கட்டும் பணி துவங்கியுள்ளது. இதற்காக, தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கியுள்ளது. மேலும், வாகனப் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த பணி அடுத்தாண்டு ஜனவரி மாதம் நிறைவடைந்த பின், பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Kurinjipadi ,
× RELATED குறிஞ்சிப்பாடி அருகே பரபரப்பு...