×

ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்ற அமமுக வேட்பாளரின் வெற்றியில் வெடித்தது சர்ச்சை உசிலம்பட்டி அருகே பரபரப்பு

உசிலம்பட்டி, பிப். 24: உசிலம்பட்டி அருகே எழுமலை பேரூராட்சி 15வது வார்டில் அமமுக சார்பில் போட்டியிட்ட பக்ருதீன், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ரகுமத்துலாவை விட ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் அமமுக வேட்பாளர் பக்ருதீனின் மனைவி மும்தாஜ்க்கு அதே வார்டில் இரு ஓட்டுகள் இருப்பதும், அந்த இரு ஓட்டுகளையும் அவர் செலுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தற்போது திமுகவினரால் கண்டறியப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாக்கு செலுத்தும் போதோ, வாக்கு எண்ணிக்கையின் போதோ முறைகேடுகள் குறித்து புகார் அளித்தால் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர்களால் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால், இவ்விவகாரத்தில் திமுகவினர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Amamuka ,Usilambatti ,
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...